சேலம் மாவட்டம். பெத்தநாயக்கன்பாளையம் அருகே நிலத்தை மீட்டு தரக்கோரி விவசாயி தனது குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரைநிர்வாண போராட்டத்தால் பரபரப்பு,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே மேற்கு ராஜபாளையம் கோனமடுவு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவருக்கு அதே பகுதியில்1.61 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது இந்நிலையில் ஆறுமுகம் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார்,
இதனையடுத்து ஆறுமுகத்துக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ள நிலையில் வாரிசுதாரர்களுக்கு முறைப்படி வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை அளவீடு செய்து வாரிசுகளின் பெயர்களில் நிலத்தை பிரித்து கிரையம் செய்து அதற்கான பட்டாவை வழங்குமாறு பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வாரிசுதாரர்கள் மனு வழங்கியுள்ளனர்,
இந்நிலையில் மேற்கு ராஜபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் உள்ளிட்ட ஐந்து நபர்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பட்டா வழங்க கூடாது என வட்டாட்சியர் அலுவலகத்தில் எதிர் மனு தாக்கல் செய்துள்ளனர் இதனால் இவர்களுக்கு பட்டா வழங்க கால தாமதமாகி வருவதால் ஆத்திரமடைந்த அவர்களின் குடும்பத்தினர் இன்று பெத்தநாய்ககன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்,
அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு போராட்டக்காரர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அரைநிர்வாண போராட்டம் நடைபெற்றதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.