சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையத்தில் நடைபெற்ற தற்காலிக பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான முன் எச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்.

சேலம்,
தமிழகத்தில் அனைவரும் கொண்டாட கூடிய தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்கள் உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாழப்பாடி காவல் துறையினர் அனைத்து தற்காலிக,
பட்டாசு உரிமையாளர்களை அழைத்து வாழப்பாடி கண்காணிப்பாளர் ஸ்வேதா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர் இதில் கடை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும்,
உரிமக்கட்டிடம் வில்லை வீடு அல்லது காங்கிரீட் உள்ள நிரந்தர கடைக்கு உட்புறமாக தற்காலிக கடை அமைக்க கூடாது.
உரிம கட்டிடத்தின் பரப்பளவு குறைந்தபட்சம் ஒன்பது சதுர மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
பட்டாசு கடை மாடி மாடியில் வைக்கக்கூடாது தரை மட்டமான கட்டிடத்தில் தான் இருக்க வேண்டும்.
மற்ற பொருட்கள் பட்டாசு கடையில் பட்டாசுகளுடன் சேர்த்து வைக்கவோ அல்லது சேர்த்து விற்பனை செய்யவும் கூடாது.
ஒரு பட்டாசு கடைக்கு மற்றொரு பட்டாசு கிடைக்கும் அல்லது எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் உள்ள கட்டிடத்திற்கும் குறைந்தபட்சம் 15 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
பட்டாசு கடையினால் போக்குவரத்திற்கு ஏதேனும் இடையூறு உண்டா என்பதை பார்த்து போக்குவரத்திற்கு இடையூறு இல்லா வண்ணம் கடை அமைக்க வேண்டும் தீ பாதுகாப்பு கருவி விதிமுறைகளின் படி கீழ்கண்ட தீயணைப்பு சாதனங்கள் வைத்திட வேண்டும்.
தண்ணீர் கொண்ட தீ வாளிகள் உலர் மணல் கொண்ட தீ வாளிகள் 220 லிட்டர் தண்ணீர் கொண்ட தொட்டி பீப்பாய் தண்ணீர் கரியமிலவாய்வு புகை பிடித்தல் கூடாது என்ற அறிவிப்பு பலகை கடை முன் இருத்தல் வேண்டும்.
இந்த அறிவுறுத்தலின்படி பட்டாசு கடை உரிமையாளர்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் ஒத்துழைப்பு தராவிட்டால் உடனடியாக பட்டாசு கடை அப்புறப்படுத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டது.