ஜூலை 28-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டதோடு, போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
