BREAKING NEWS

ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் என தஞ்சையில் செய்தியாளர்களை சந்திப்பில் டிடி.வி தினகரன் உறுதிப்பட தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான் என தஞ்சையில் செய்தியாளர்களை சந்திப்பில் டிடி.வி தினகரன் உறுதிப்பட தெரிவித்தார்.

 

தஞ்சாவூரில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேட்டி அளித்த அவர் சட்டசபையில் சபாநாயகருக்கு தான் அதிகாரம் அதிக அளவில் உள்ளது.

 

ஆனால் நாற்காலி பிரச்சனைக்காக எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம். சபாநாயகரின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி பதட்டத்தில் இருக்கிறார்.

 

முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் உடன் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசி உள்ளார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். அது உண்மை என்றால் அதற்கான ஆதாரத்தை அவர் காண்பிக்கட்டும்.

 

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்தை டி.வி.யில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

 

ஒரு முதலமைச்சருக்கு முக்கிய பிரச்சினைகள் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவர் டி.வி.யில் பார்த்து நிலைமையை தெரிந்து கொண்டேன் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

 

நீதிபதி தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தவறு செய்தது யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கொடுத்துள்ள அறிக்கை ஏதோ அரசியல்வாதி கொடுத்துள்ள அறிக்கை போல் உள்ளது.

 

நீதிபதி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல மதிப்பு உள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உலகத்தரம் வாய்ந்த டாக்டர்கள். ஜெயலலிதா மரணம் இயற்கையானது தான். இவ்வாறு அவர் கூறினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )