தஞ்சையில் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஸ்கேட்டிங் பேரணி,

கலைஞரின் பிறந்தநாளையொட்டி, தஞ்சை மாநகராட்சி சார்பில் மணிமண்டபத்திலிருந்து மாணவர்களின் ஸ்கேட்டிங் பேரணி துவங்கியது தஞ்சை மேயர் சண்.ராமநாதன் துவக்கிவைத்த ஸ்கேட்டிங் பேரணியில் தஞ்சை நகரை தூய்மையாக வைத்துருப்போம், குப்பையை வீதிகளில் கொட்டமாட்டோம், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் மஞ்சள் பையை பயன்படுத்துவோம் என்கிற பதாதைகளுடன் தஞ்சை நகரை வலம் வந்தது ஸ்கேட்டிங் பேரணி.



பேரணி மாநகராட்சி அலுவலகத்தை அடைந்ததும் ஆணையர் சரவணகுமார் உள்ளிட்டோர் தூயமை பணிகளுக்கு என்னை அர்பணித்துக்கொள்ள எனது நேரத்தை ஒதுக்குவேன், என்றும் நான் பொது இடங்களில் குப்பைகளை கொட்டமாட்டேன் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்
