தஞ்சையில் மதுபானம் வேண்டாம் போதை கலாச்சாரம் வேண்டாம் என பதாகைகளும் தேமுதிகவினர் காந்தி சிலை முன்பு போராட்டம்.

தஞ்சாவூர், மதுபானம் வேண்டாம் போதை கலாச்சாரம் வேண்டாம் என பதாகைகளுடன் தேமுதிகவினர் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் டாக்டர் ராமநாதன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் அப்போது வேண்டாம் வேண்டாம் மதுபானம் வேண்டாம்.
தமிழகத்தை போதை கலாச்சாரமாக மாற்ற வேண்டாம் என கோஷம எழுப்பி திடீரென காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
CATEGORIES தஞ்சாவூர்