தரங்கம்பாடி அருகே அரசு பேருந்து காரின் மீது மோதியதில் இருவர் படுகாயம் , விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் தனது மனைவி மீனாட்சி உடன் உறவினர் திருமணத்திற்காக காரைக்கால் வரை இன்று காலை சென்றுள்ளார்.
தொடர்ந்து திருமணத்தை முடித்துவிட்டு தரங்கம்பாடி வழியாக ஒழுகைமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்திலிருந்து ஆக்கூர், திருக்கடையூர் வழியாக காரைக்கால் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒழுகைமங்கலம் பகுதியில் உள்ள வளைவில் வேகமாக முந்தி சென்றுள்ளது.
இதனிடையே எதிரே வந்த கார் மீது அரசு பேருந்து மோதியதில் காரின் முன் சேதம் அடைந்து அதில் பயணம் செய்த பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தினை விட்டு தப்பிச்சென்ற நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பொறையார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது அரசு பேருந்து காரின் மீது அதிவேகமாக சென்று மோதக்கூடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.