BREAKING NEWS

தரங்கம்பாடி தாலுக்கா சின்னமேடு- சின்னங்குடி ஆகிய மீனவ கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா.

தரங்கம்பாடி தாலுக்கா சின்னமேடு- சின்னங்குடி ஆகிய மீனவ கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி. மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிகளில் 181 மீனவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினர்.

 

 

இந்நிகழ்ச்சியில், செம்பனார்கோயில் ஒன்றியக் குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர், திமுக ஒன்றிய செயலாளர்கள் அமுர்த.விஜயகுமார், எம்.அப்துல் மாலிக், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர்,

 

செம்பனார்கோயில் ஒன்றியக் குழுத்துணைத் தலைவர் பாஸ்கரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, சாந்தி, காலமநல்லூர் ஊராட்சித் தலைவர் நடராஜன் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS