BREAKING NEWS

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை!- உயர் நீதிமன்றம் அதிரடி.

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடை!- உயர் நீதிமன்றம் அதிரடி.

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிப் பெற்றோர் சங்கத் தலைவர் ஷீலா பிரேம்குமாரி, உயர் நீதிமன்ற கிளையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பான மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “தமிழகத்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர்களில் ஏராளமானோர், அப்போது, அமலில் இருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. அப்போது நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர்கள் ஏராளமானோர் இன்னும் பணி கிடைக்காமல் உள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு ஜூன் 23-ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )