திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளசென்னமநாயக்கம்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் தனியார் அர்ஜுன் பட்டாசு கடை உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளசென்னமநாயக்கம்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் தனியார் அர்ஜுன் பட்டாசு கடை உள்ளது பல வட்டங்களாக குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு கடை உள்ளது இந்நிலையில் தற்போது பட்டாசு கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு கடையில் இருந்த பட்டாசுகள் மிகப்பெரிய சத்தத்துடன் வெடிக்க தொடங்கின.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே என்பதால் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் நேரில் வந்து தற்போது பட்டாசு கடைகள் உள்ள தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பட்டாசு கடைக்குள் யாரும் உள்ளார்களா என்பது குறித்து முழுவதுமாக தீயை அணைத்த பின் பத்திரிகை மேலும் குடியிருப்பு பகுதியில் அருகே பட்டாசு கடை இருந்ததால் மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த குடியிருப்பு பகுதி மக்களும் வெளியே ஓடினர் மேலும் பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதம்.
