திமுக, திரிணமூல், காங்கிரஸ் எம்பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்.

மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக திமுக எம்பிக்கள் உட்பட 19 எம்பிக்கள் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று மாநிலங்களவையில் நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரில், திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷை முற்றுகையிட்டு, பதாகைகளை ஏந்தி தொடர் முழக்கங்களில் ஈடுபட்டு வந்தார்கள். இதையடுத்து கனிமொழி என்.வி.என் சோமு, கல்யாண சுந்தரம், அப்துல்லா, சண்முகம், என்.ஆர். இளங்கோ, கிரிராஜன், சுஷ்மிதா தேவ், டோலாசென் உள்ளிட்ட 19 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விதி எண் 256ன் கீழ் தொடர் அமளியில் ஈடுபட்ட காரணத்தால், அவை நடவடிக்கைகள் முடங்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
CATEGORIES முக்கியச் செய்திகள்
TAGS தலைப்பு செய்திகள்

