திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுதலை.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வகையான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து முதல்கட்டமாக அவர்களில் 16 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.
