BREAKING NEWS

திருச்சியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சியில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி, 

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலைவர் அழகிரி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் டாக்டர்.எம். கே விஷ்ணு பிரசாத் ஆகியோர்களின் ஆணைக்கிணங்க,

 

 

தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன் அவர்கள் தலைமையில் வழி விடு முருகன் கோயில் அருகில் உள்ள தலைவர் ராஜீவ் காந்தி அவர்களின் சிலையின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ரவி அவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் முரளி வர்த்தக பிரிவு கணேசன், சோசியல் மீடியா மாநிலத் தலைவர் அபுதாஹீர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS