BREAKING NEWS

திருநெல்வேலி மண்டலம் வார்டு 16 பகுதிகளில் மேயர் பி. எம். சரவணன் ஆய்வு.

திருநெல்வேலி மண்டலம் வார்டு 16 பகுதிகளில் மேயர் பி. எம். சரவணன் ஆய்வு.

செய்தியாளர் சங்கர நாராயணன்.

திருநெல்வேலி,

இந்த ஆய்வின் போது வார்டு 16 அரசன் நகர், லாலுகாபுரம், அமீர்சாஹிப் நகர், ஜாமியா
பள்ளிவாசல் தெரு, சிக்கந்தர் மேல தெரு, சிக்கந்தர் தெரு, பாஸ்கர தொண்டைமான் தெரு
ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு சாலை வசதி, வாறுகால் வசதி, குடிநீர், தெருவிளக்கு,
போன்ற பொது மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

 

அப்பகுதியில் குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளரிடம் பொது மக்களிடமிருந்து
பெறப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு எவ்வளவு குப்பைகள் சேகரிக்கப்படுகிறது என கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உட்பட மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )