திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் கஞ்சா கடத்தல் கும்பல் 100 கிலோவுடன் கைது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்டம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்னை நடைபெற்று வந்த நிலையில் கஞ்சா கடத்தல் கும்பலை கைது செய்ய தென்மண்டல காவல் துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க் IPS அவர்களின் உத்தரவின் பேரில் திருநெல்வேலி சரக காவல் துறை துணை தலைவர் திரு. பிரவேஸ்குமார் IPS அவர்களின் அறிவுறுத்தலின்படி..
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் IPS அவர்களின் வழிகாட்டுதலின் படி அம்பாசமுத்திரம் உட்கோட்டம் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. பல்வீர்சிங் IPS அவர்களின் முன்னிலையில் வி.கே.புரம் உதவி ஆய்வாளர் திரு. முருகேஷ் அம்பாசமுத்திரம் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சிவக்குமார், தலைமை காவலர் திரு.முரளி, மு.நி.காவலர்கள் திரு. ராஜேஷ், திரு. மகாராஜன்,
திரு.இசக்கி பாண்டி மற்றும் இதற்கு உதவியாக இருந்த கல்லிடைக்குறிச்சி காவலர்கள் திரு. திவான் ஷா , திரு. பஷீர், வி.கே.புரம் காவலர்கள் திரு.இசக்கி, திரு. கார்த்திக் பாபு ஆகியோர் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படையினர்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி TN 92 F 1670 பதிவெண் கொண்ட வாகனத்தை மடக்கிபிடித்து சோதனை செய்ததில் அதில் 100 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
மேலும் வாகனத்தை ஒட்டி வந்த நபர் ஸ்ரீவைகுண்டம் அருகே இராமனுஜம் புதூர், இந்திராநகர் தெருவை சார்ந்த வானுமாமலை மகன் தளவாய் மாடன் வயது 24/22 என்பவரை கைது செய்து நடத்திய விசாரனையில் ஆந்திராவில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதாக ஒப்புக்கொண்டார்.
மேலும் அவனது கூட்டாளிகள் சிலரை தீவிரமாக தேடி வருகிறார்கள். 100 கிலோ கஞ்சாவை பிடித்த தனிப்படையினரை உயர்அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள். வி.கே.புரம் P.S Cr: No 376/2022மேலும் எதிரி நீதிமன்ற வழி காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.