BREAKING NEWS

திருப்பத்தூர், சோலையார்பேட்டை புதூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே மரக்கன்று நடும் விழாவை துவங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர்.

திருப்பத்தூர், சோலையார்பேட்டை புதூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே மரக்கன்று நடும் விழாவை துவங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர்.

திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பா. சிவக்குமார்.

 

பசுமை தமிழக இயக்கத்தின் தொடக்க விழாவை தமிழக முதலமைச்சர் சென்னை வண்டலூர் பகுதியில் துவங்கி வைத்தார் அதனை தொடர்ந்து.

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட புதூர் பகுதியில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகே மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில்,

 

ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர் காவியா விக்டர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மரக்கன்று நடும் விழாவை துவங்கி வைத்தார்.

 

இதில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடப்பட்டன. உடன் கவுன்சிலர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் அரசு துறையை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )