திருவிடைமருதுார் அருகே தேப்பெருமாநல்லுாரில் புகையிலை விற்பனை நிலையத்தை சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேப்பெருமாநல்லுார் அக்ரஹாரம் தெருவில் வசிப்பவர் பாஸ்கர். இவர்களது குடும்பத்தினர் அரசு அனுமதி பெற்று பல ஆண்டுகளாக சீவல், புகையிலை விற்பனை செய்து வந்தனர். இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்தது.
இதையடுத்து இந்நிறுவனமும் புகையிலை விற்பனையை நிறுத்தியது. இந்நிலையில் இந்நிறுவனத்தில் புகையிலை ஸ்டாக் வைத்திருப்பதாக திருவிடைமருதுார் போலீசுக்கு தகவல் வந்ததை அடுத்து தாசில்தார் சுசீலா மற்றும் திருவிடைமருதுார் போலீசார் சென்று விசாரித்தனர்.
அப்போது முன்பு விற்பனை செய்ய வைத்திருந்த பழைய ஸ்டாக் 35 டன் புகையிலை இருந்துள்ளது. இதனால் அந்த கம்பெனிக்கு அரசு அலுவலர்கள் சீல் வைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
CATEGORIES தஞ்சாவூர்