BREAKING NEWS

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்.

தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலையில் வசித்து வந்த ராசாத்தி அம்மாள் என்ற முதியவர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

 

அவரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரோத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் வைத்திருந்தனர். அப்பொழுது ராசாத்தி அம்மாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனை முன்பு திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ராசாத்தி அம்மாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முடிவில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறிய பின்பு சாலை மறியல் ஈடுபட்ட உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.

 

இந்த சம்பவத்தால் திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

CATEGORIES
TAGS