தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் பெயரில் சமூக வலைதள மோசடி.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் சுயவிவரப் படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பணம் கேட்டு வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சில ஏமாற்றுக்காரர்கள் மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனது சுயவிவரப் படத்தை சமூக வலைதளங்களில் வைத்து பணம் கேட்டு செய்தி அனுப்பி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆகவே இதுபோன்று வரும் போலி செய்திகளை நம்ப வேண்டாம் இது குறித்து முறையாக சைபர் செல்லில் முறையான புகார் தொடரப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
CATEGORIES தூத்துக்குடி