BREAKING NEWS

தூத்துக்குடியில் குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் கல்லால் தலையில் அடித்து கொலை.

தூத்துக்குடியில் குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் கல்லால் தலையில் அடித்து கொலை.

தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் அருகே பாலடைந்த இடிந்த நிலையில் கேட்பார் அற்ற வீடு ஒன்று உள்ளது அதன் அருகே உள்ள அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்கிவிட்டு மதுபான கடை அருகே உள்ள மது அருந்து இடங்களில் அனைத்து பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதால் இது போன்ற பாலடைந்த கட்டிடங்கள் மற்றும் ஒதுக்கு புறமான இடங்களில் குடிமகன்கள் குடிப்பது வழக்கம்,.

 

இதன்படி சின்ன கண்ணுபுரத்தில் ஏற்கனவே தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதின் மூலம் தனது மனைவியை இழந்த தூத்துக்குடி தேவர் காலனி பகுதியைச் சேர்ந்த கொம்பையா என்பவரது மகன் பூல் பாண்டி மற்றும் சின்ன கண்ணு புரத்தைச் சேர்ந்த திருமணி என்பவரது மகன் மாரிமுத்து ஆகிய நண்பர்கள் இருவரும் மது அருந்த சின்ன கண்ணபுரம் அரசு மதுபான கடைக்கு வந்து மதுவை வாங்கிக்கொண்டு அருகில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் இருந்து மது அருந்தி உள்ளனர்.

 

அப்போது மது போதையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி முற்றியதில் மாரிமுத்து பூல் பாண்டியின் தலையை அருகில் கிடந்த கற்களை வீசி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

 

 

இது குறித்து சிப்காட் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையுண்ட
பூல் பாண்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே இரண்டு தினங்களுக்கு முன்பு இரட்டை கொலை அதே பகுதியில் மீண்டும் இந்த கொலை சம்பவம் அதே பகுதியில் கொலை நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

தூத்துக்குடி ஊரின் ஒதுக்குப்புறத்தில் இந்த மதுபான கடை உள்ளதால் இந்த மதுபான கடை மது அருந்த இடத்திற்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து குடிமகன்கள் அதிகளவில் வருவதால் இங்கு அடிக்கடி பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது எனவே மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் இல்லை என்றால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )