தென்காசி மாவட்டம் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு அரசின் இலவச திருமண நிகழ்வு நடைபெற்றது

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச திருமணம் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மண்டலத்தில் 20 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில்,
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சின்னராஜா – கௌசல்யா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். வனமகன் சின்ன ராஜா மணமகள் கௌசல்யா கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டினார்.
பின்னர் மணமக்களை விழாவிற்கு வருகை தந்த அனைவரும் வாழ்த்தினார் இந்நிகழ்வில் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி திருக்கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் நகர திமுக செயலாளர் பிரகாஷ் உட்பட ஏராளமான பங்கேற்பு.
CATEGORIES தென்காசி
TAGS இந்து சமய அறநிலைத்துறைசங்கரநாராயணசுவாமி திருக்கோவில்தமிழ்நாடுதமிழ்நாடு அரசு இலவச திருமணம்தலைப்பு செய்திகள்தென்காசி மாவட்டம்