BREAKING NEWS

தேங்கி கிடக்கும் நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேங்கி கிடக்கும் நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம், ஆலக்குடியில் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலைமறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் தஞ்சை அருகே வல்லம், கல்வி ராயன்பேட்டை, ஆலக்குடி உள்பட பல இடங்களில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது.

 

 

மேலும் அறுவடை முடிந்து நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக சாலைகளில் காய வைக்கப்பட்டு வந்த விவசாயிகளின் நெல் குவியல்கள் மழை நீரில் மீண்டும் நனைந்தது.

 

 

தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை நடப்பாண்டு இலக்கை மிஞ்சி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

 

தற்போதுவரை 80 சதவீதம் நெல் அறுவடை நடந்துள்ளது. பல இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும் பணிகளும் நடக்கிறது.

 

 

நெல் ஈரப்பதம் 17 சதவீதம் மட்டும் பிடிக்கப்படுவதால் விவசாயிகள் தங்களது அறுவடை செய்யப்பட்ட நெல்லை சாலைகளில் காயவைத்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

 

 

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் இரு இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

 

இதில் ஆலக்குடி பள்ளியின் அருகில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வெகுநாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

 

கடந்த ஒரு வாரமாக நெல் மூட்டைகள் சரியாக பிடிக்கப்படாமல் உள்ளது. இங்கு பணிபுரிபவர்கள் நேரத்திற்கு வருவதில்லை.

 

காலையில் வராமல் மாலை வேளையில் வருகின்றனர். மேலும் நெல் மூட்டைகள் தயாராக இருந்தாலும் வெறும் 500 அல்லது 600 மூட்டைகள் வரை மட்டுமே பிடிக்கின்றனர். 

 

 

விவசாயிகள் நெல்லை சரியாக காய வைத்துள்ளனர். ஆனால் பணிக்கு சரியான நேரத்தில் ஊழியர்கள் நெல் மூட்டைகளை சாலையிலேயே அடுக்கி வைத்திருக்கும் நிலை உள்ளது.

 

திடீர் திடீரென்று மழை பெய்வதால் நெல் மூட்டைகள் நனைந்து மீண்டும் காய வைக்க வேண்டும் நிலை உருவாகி விடுகிறது.

 

 

மேலும் தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நெல்லை விற்றால்தான் பண்டிகையை விவசாயிகள் கொண்டாட முடியும் என்ற நிலையில்,

 

காலதாமதம் இன்றி விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ஆலக்குடியில் விவசாயிகள் சாலைமறியல் மேற்கொண்டனர். 

 

 

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )