தேனி அருகே காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பனை விதை நடவு.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம் சிலமலை அருகேயுள்ள சூலப்புரம் கண்மாயில் 1500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
பசுமையின் அர்ப்பணிப்பாளர் போடி பனை முருகன் விதைகள் சேகரித்தார்.
சின்னமனூர் தாய் தமிழ் டிரஸ்டி திரு.செல்வக்குமார், அவர்களும், திருமலாபுரம் நாடார் மேனிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும், இணைந்து நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
தேனிமாவட்ட பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் எம்.நேரு ராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
உத்தமபாளையம் பசுமைக் காவலர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெயக்குமார் , ரெட் கிராஸ் அமைப்பு சுருளிப்பட்டி அன்புராஜ். உத்தமபாளையம் ஆர் 6 திரு,ரகமத்துல்லா, ஸ்வீட் ட்ரஸ்ட் திரு, ஜெயச்சந்திரன்,
வறியவர்களின் வழிகாட்டி கோகிலா முருகேசன், கோகிலா பசுமைச் சோலை அமைப்பின் சார்பாக மு,டியுல், வெள்ளக்கரடு ராஜ்குமார். ஓய்வு பெற்றவன அலுவலர் திரு.செல்வராஜ் ஆகியோர்கள் களப்பணியில் 1500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர் முனைவர் கே, கே முருகேசன் அவர்கள் நன்றி கூறினார்.