தேனி அருகே குடிப்பதற்காக பணம் தராததால் தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் கிராமத்தில் மருது பாண்டி என்ற இளைஞர் அவரது தாய் ஜோதிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டது நிலையில் தாய் பணம் தர மறுத்ததால் வீட்டில் இருந்த மரம் வெட்டும் கோடாரியை கொண்டு தலையில் பலமாக தாக்கியதால் தாய் படுகாயம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து காயமடைந்த ஜோதியை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாயை கோடாரியால் வெட்டி கொன்ற மகனை தேவதானப்பட்டி காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES குற்றம்