BREAKING NEWS

தேனி அருகே சித்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா.

தேனி அருகே சித்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா.

தேனி அருகே பொம்மைய கவுண்டன் பட்டி 24 மனை தெலுங்கு பட்டி செட்டி உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவிலில் இன்று “மகா கும்பாபிஷேக” விழா நடைபெற்றது.

 

இவ்விழாவை ஒட்டி கோவில் வளாகப் பகுதியில் சிறப்பு ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

 

தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை , கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் , தீபாரதனை, அருட்பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

 

 

பின்னர் கடங்கள் புறப்பாடாகி சித்தி விநாயகர் கோவில் கலசத்திற்கு புனித தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புனித நீரை பக்தர்கள் மீதும் தெளித்தனர்.
தொடர்ந்து மூலவருக்கு 24 வகையான அபிசேகங்கள் , பூஜைகள் நடைபெற்றது.

 

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 

CATEGORIES
TAGS