தேனி எடமால் தெருவில் உள்ள நாடார் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் வித்யாரம்ப நிகழ்ச்சி இன்று காலை முதல் சிறப்பாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் தேனி எடமாள் தெருவில் உள்ள நாடார் சரஸ்வதி வித்யாலயா ஆரம்பப் பள்ளியில் இன்று காலை முதல் விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்கள் தங்களது மழலை குழந்தைகளை பள்ளியில் ஆர்வத்துடன் சேர்த்தனர்.
இந்த நிகழ்ச்சி தேனி மேலப் பேட்டை இந்து நாடார் உறவினர் முறை சங்க பொருளாளர் ஆனந்தவேல் தலைமையிலும் மற்றும் செயலாளர் நவமணி இணைச்செயலாளர் தீபகணேஷ் முன்னிலையிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வித்யாரம்பம் என்னும் மழலை குழந்தைகள் பள்ளிப்படிப்பை தொடங்கும் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த ஏராளமான மழலை குழந்தைகளுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் பூரணசெல்வி ரோஜா பூக்கொடுத்து வரவேற்றார்.
பின்னர் மழலைகுழந்தைகள் ஆசிரியர்கள் உதவியுடன் பச்சரிசி மற்றும் நெல்லில் தமிழின் முதல் எழுத்தான அ என்ற அகர எழுத்தை எழுதியும் மகிழ்ந்தனர் .
தனது குழந்தை முதல் எழுத்து எழுதுவதை கண்டுகளித்த பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.