BREAKING NEWS

தேனி மாவட்டத்தில் தொடரும் கஞ்சா கடத்தல். மீன்பெட்டிகளுக்கு நடுவே பதுக்கி கடத்தி வரப்பட்ட 60கிலோ கஞ்சா பறிமுதல்- 5 பேர் கைது.

தேனி மாவட்டத்தில் தொடரும் கஞ்சா கடத்தல். மீன்பெட்டிகளுக்கு நடுவே பதுக்கி கடத்தி வரப்பட்ட 60கிலோ கஞ்சா பறிமுதல்- 5 பேர் கைது.

தேனி மாவட்டத்தில் சமீபகாலமாக வெளிமாநிலங்களில் கஞ்சா கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் ஆந்திராவில் இருந்து லாரியில் கருவாடு கூடைகளுக்கு அடியில் பதுக்கி கடத்தி வந்த 1200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

இந்நிலையில் ஆந்திரமாநிலம் விசாகபட்டிணத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

இதனையடுத்து கடமலைக்குண்டு போலீசார் அய்யனார்கோவில் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மீன்கள் ஏற்றி வந்த ஒரு மினிலாரியை மறித்து சோதனை செய்தனர்.

 

 

அப்போது மீன்பெட்டிகளுக்கு நடுவில் தலா 2 கிலோ பண்டல்கள் வீதம் 30 பண்டல்களில் 60கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தி வந்த வருசநாடு அருகே உள்ள சிங்கராஜபுரத்தை சேர்ந்த நல்லமலை, அருண், ஈஸ்வரன்,

 

புதுக்கோட்டை மாவட்டம் வண்ணிச்சிபட்டியை சேர்ந்த ராஜா, குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா பிடிபடுவது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

CATEGORIES
TAGS