BREAKING NEWS

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 100 அடி தண்ணீர் இல்லாத மெட்டை கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 100 அடி தண்ணீர் இல்லாத மெட்டை கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி.

மூன்று வயது ஈஷா இரண்டு வயது ஜீவிதா இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு.

போடி தீயணைப்புத் துறையினர் 3 மூன்று நபர்களை பலத்த காயங்களுடன் மீட்டு சிரிச்சிக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதி.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள இந்திரா நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் (31). இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

 

 

இவர் அதே பகுதியில் உள்ள கிணற்றில் தனது மனைவி வீரமணி (24), குழந்தைகள் ராஜபாண்டி (6), ஈஷா(3), ஜீவிதா (2) ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

ஐந்து பேர் அந்த கிராமம் பகுதியில் மழை அடிவாரத்தில் உள்ள 100 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத தூசி மணல் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

அப்போது கிணற்றில் தற்கொலைக்கு முயற்சித்தவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் தோட்டத்தில் பணியாற்றி வந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது ஐந்து பேர் கிணத்தில் உயிருக்கு போராடியத்தை பார்த்து உடனடியாக அப்பகுதி மக்கள் போடி பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தற்கொலைக்கு முயற்சித்த ஐந்து பேரை மீட்கும் பணியில் பொதுமக்கள் உதவியுடன் ஈடுபட்டனர்.

 

 

100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் படிக்கட்டுகள் இல்லாததால் கயிறுகள் வைத்து தீயணைப்புத் துறையினர் இறங்கி மிற்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தற்கொலை முயற்சி குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது குடும்பப் பிரச்சனை மற்றும் விவசாயத்தில் நஷ்டம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

தற்போது 5 பேரையும் தீயணைப்புத் துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி 3 நபர்களையும் உயிருடன் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

 

ஈஷா 3 வயது குழந்தையும் ஜீவிதா இரண்டு வயது குழந்தையும் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

போடிநாயக்கனூர் தாலுகா காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS