தேனி மாவட்டம் போடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள்.

செய்தியாளர் மு.பிரதீப்
தேனி மாவட்டம் போடி அருகே இருக்கக்கூடிய நாகலாபுரம் கிராமத்திற்கு அரசு பேருந்து சரிவர நேரத்தில் வருவது இல்லை என்றும் அரசு பஸ்கள் மிகவும் மோசமான நிலையில் மழைக்காலங்களில் மாணவ மாணவிகள் நனைந்தவாறு வருவதாகவும் கூறி பெற்றோருடன் மாணவ மாணவிகள் அரசு பஸ்சை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போடி நாகலாபுரத்தில் அரசு நகரப் பேருந்துகள் சிறைப்பிடிப்பு. மழைக்காலத்தில் பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மாணவிகள் நனைந்து வருவதாகவும்,
உரிய நேரத்தில் பேருந்துகள் முறையாக வருவதில்லை என்றும் கூறி பேருந்துகளை சிறைபிடித்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
CATEGORIES தேனி