தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு..,
அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஊர்வலம் வந்து முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜய் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யா துரை பாண்டியன்,
அன்புராஜ்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, நகர பொருளாளர் ஆரோக்கியராஜ்,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பகமூர்த்தி,மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சாமிராஜ்,
வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி, அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் கடம்பூர் விஜி,
கடம்பூர் மாயா துரை, அழகர்சாமி, மனோகரன், கனி, பழனிகுமார், பழனி முருகன், ஜெய்சிங், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.