தைப்பூச திருவிழா முன்னிட்டு கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள நாகலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சந்தன மாரியம்மன் மற்றும் துர்க்கை அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
கும்பாபிஷே விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும்
தமிழ்நாட்டின் தென்பழனி என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டு தொடரும் விமர்சையாக கொண்டாடப்படும்.
இதையொட்டி இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவிற்கு கடந்த 27ஆம் தேதி கொடியேற்றபட்டது.
விழா நாட்களில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்த விழாவின் முக்கிய தைப்பூசத் திருநாளான இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜைகள் நடைபெற்றது. தைப்பூச விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் கோவில்பட்டி நகர செயலாளர் விஜய பாண்டியன், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், வர்த்தக அணி பிரிவு காமராஜ், கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.