நத்தத்தில் அரசு பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் சிஎஸ்ஐ பள்ளி அருகே கருங்காலக்குடியில் இருந்து நத்தம் வந்த அரசு நகரப் பேருந்தை வழிமறித்த ஆசாமி ஒருவர் பேருந்தின் அடியில் சென்று ரகளை ஈடுபட்டார்.
இதனால் நத்தம்-காரைக்குடி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை அழைத்து காவல் நிலையத்திற்கு சென்றனர்.அங்கு வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் செங்குளத்தை சேர்ந்த பாண்டி பிரபு (26). இவர் தேங்காய் உறிக்கும் கூலி வேலை செய்து வருவது தெரியவந்தது.
மேலும்போதையில் அரசு பஸ்சை மறுத்தாக கூறியதை அடுத்து நத்தம் போலீசார் ரகளையில் ஈடுபட்ட அதற்காக வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர் செய்து வருகின்றனர்.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
CATEGORIES திண்டுக்கல்