நாட்றம்பள்ளி அருகே மழையினால் மேற்கூரை சேதம் உடனடியாக நாட்றம்பள்ளி வட்டாட்சியர் நிவாரணம் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா ஆத்தூர் குப்பம் அருகே வெள்ளைக்காரன் வட்டத்தைச் சார்ந்த திரு முனியப்பன் S/O முனிசாமி என்பவரின் குடிசை வீட்டின் ஒரு பக்க சுவர் மேற்கூரை மழையினால் முழுவதுமாக சேதம் அடைந்தது.
உடனடியாக உதவி திட்ட இயக்குநர் விஜயகுமாரி அவர்களின் தலமையில் மேற்பார்வையிட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் மேற்படி அந்த நபருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது . நாட்றம்பள்ளி வட்டாட்சியர் திரு குமார், ஊராட்சி மன்ற தலைவர் திரு S. செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் S. சித்ரகலா, வருவாய் ஆய்வாளர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS ஆத்தூர் குப்பம்தமிழ்நாடுதமிழ்நாடு அரசுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்நாட்றம்பள்ளி தாலுகாமழையினால் குடிசை வீடு சேதம்