BREAKING NEWS

நிலக்கோட்டை அருகே பச்சிளங்குழந்த இறந்த சம்பவம் தாய் உட்பட 2 பேர் கைது.

நிலக்கோட்டை அருகே பச்சிளங்குழந்த இறந்த சம்பவம் தாய் உட்பட 2 பேர் கைது.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.

 

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரின் மனைவி துர்கா தேவி. 2 பேர்களுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு திருமணம் நடைபெற்று குழந்தை உள்ளது. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் துர்கா தேவி தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தற்போது 2 தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார் பட்டி வசிக்கும் தனது மாமா பாலு வேலை செய்யும் தோட்டத்தில் வந்து தங்கி இருந்தார்.

 

தோட்டக் குடியிருப்பில் தங்கி இருந்தபோது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக ஒன்றை வயது ரத்திகா குழந்தை தவறி கிணற்றுக்குள் விழுந்தது. யாரும் பார்க்காதால் தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து போனது. இரவு முழுக்க பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

 

 

இந்நிலையில் சந்தேகமடைந்த உறவினர்கள் மற்றும் தாய் துர்கா தேவி ஆகியோர்கள் கிணற்றில் ஏதேனும் தவறி விழுந்திருக்கலாமா? என்ற சந்தேகத்தின் பேரில் நிலக்கோட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் விவேகானந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தேடிப் பார்த்த போது பிணமாக ரத்திகா மீட்கப்பட்டார்.

 

இத்தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா நேரில் சென்று குழந்தை ரத்திகா பிரேதத்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

விசாரணையில் துர்கா தேவி தனது கள்ளக்காதலன் தோப்புபட்டியைச் சேர்ந்த அஜய் வயது 23. ஆகிய 2 பேரும் குழந்தை ரத்திகாவை தொட்டிலில் விட்டு விட்டு கவனக்குறைவாக இரவு நேரத்தில் அஜய், துர்க்காதேவி குழந்தையை கவனிக்காமல் இருந்ததால் தான் குழந்தை ரத்திகா இறந்து போனதாக விசாரணையில் தெரிய வந்தது.

 

அஜய் மற்றும் துர்காதேவி 2 பேரையும் நிலக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பால முத்தையா இரண்டு பேர்களையும் கைது செய்து திண்டுக்கல் சிறைச்சாலையில் அஜய்யையும், நிலக்கோட்டை சிறைச்சாலையில் துர்கா தேவிவையும் அடைத்தனர்.

 

பச்சிளங்குழந்த இறந்து போனதற்கு தாய் காரணமாக இருந்ததால் தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் நிலக்கோட்டையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )