நிலக்கோட்டையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த தின விழா..!

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பழங்கள், பிரட், பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நவம்பர் 26-ந் தேதி நேற்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்பட்டது.
இதேபோன்று நேற்று திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற நாம் தமிழர் கட்சியின் சார்பாக, கட்சியின் முன்னாள் தொகுதி தலைவரும், நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான சங்கிலி பாண்டியன் தலைமை தாங்கி நோயாளிகளுக்கு இலவசமாக பிரட் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நோயாளிகளை சந்தித்து பழங்கள், பிரட், பிஸ்கட், போன்றவைகளை வழங்கினர்.
வீரத்தமிழர் முன்னணியின் தொகுதி பொறுப்பாளர் ஜெயக்குமார், வீரமணி, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் இளைஞர் அணி பொறுப்பாளர் முத்துப்பாண்டி, நிலக்கோட்டை பேரூராட்சி பொறுப்பாளர்கள் சங்கிலி பாண்டியன், கருப்பையா, யோகேஸ்வரன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பட விளக்கம் – நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நேயாளிகளுக்கு இலவசமாக உணவுப்பொருட்கள் வழங்கிய போது எடுத்த படம் .