நெல்லை மாவட்டம் சுடுகாடு இறந்த அனாதை பிணங்களை அடக்கம் செய்த இடத்தை தனி நபர்கள் கல்லறைகளை இடித்து ஆக்கிரமிப்பு

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் இறந்த அனாதை பிணங்களை அடக்கம் செய்த இடத்தை 20.10.2022 அன்றுதனி நபர்கள் கல்லறைகளை இடித்துஆக்கிரமிப்பு செய்தனர்.
இதை கண்டித்து இந்து முன்னணி நாகராஜன் மாவட்ட பொதுச் செயலாளர் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம் நகரத் தலைவர் முருகன் கார்த்திக் ஆகியோர் காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியாரிடம் மனு கொடுத்தனர்.
இதை அடுத்து காவல்துறை மற்றும் வட்டாட்சியர்கள் துரிதமானநடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி கல்லறைகளை இடித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்.
CATEGORIES திருநெல்வேலி