பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் பத்தமடையில் மாலை 6.30 மணிக்கு புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பிர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வரவேற்று பேசினார். பொருளாளர் இளையாராஜா, வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அம்பை ஜலில், ஆகியோர் முன்னிலை வகித்தனார்.
கூட்டத்தில் கிழக்கண்ட் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மழைகாலம் காரணமாக எஸ்டிபிஐ கட்சியின் பேரிடர் மீட்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 07/11/2022 இந்தி திணிப்பு ஆர்பாட்டம் களக்காட்டில் நடத்துவது என தீர்மாணிக்கப்பட்டது.
கூட்டத்தில் அம்பை தொகுதி தலைவர் செய்யது நாங்குநேரி தொகுதி தலைவர் ஆஷிக்,இராதாபுரம் தொகுதி செயலாளர் பெட்டைகுளம் உசேன், மேலும் கவுன்சிலர்கள் அப்துல்கபூர், ரஹ்மத்துல்லா மேலும்,..
வி: கே.புரம் கல்லிடைகுறிச்சி, வீரவநல்லுர், வெள்ளாங்குளி, சேரன்மகாதேவி, பத்தமடை, மேலசெவல், களக்காடு,
ஏர்வாடி, மூலைக்கரைப்பட்டி தூலுக்கரப்பட்டி, பெட்டைகுளம், வள்ளியூர், திசையின்விளை ஆகிய பகுதிகளை சார்ந்த தலைவர், செயலாளர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.சிராஜ் நன்றியுரையாற்றினார்.