பவானி திருவள்ளுவர் நகரில் மழை வெள்ளம் சூழ்ந்த இடத்தை பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழையால் பவானி அருகே உள்ள காடையாம்பட்டி ஏரி நிரம்பியது.
இதனைத் தொடர்ந்து ஏரியின் உபரிநீர் பவானி நகராட்சி 7-வது வார்டு திருவள்ளுவர் நகரில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் குடியிருப்பு வாசிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பவானி நகர கழக செயலாளர் திமுக செயலாளர் ப.சீ.நாகராசன், பவானி நகர மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் மணி ஆகியோர் அப்பகுதியில் உள்ள வெள்ள நீர் புகுந்த இடங்களில் ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை கேட்டு அறிந்தனர்.
மேலும் சுகாதார ஆய்வாளரிடம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். நகர மன்ற உறுப்பினர் சாரதா சுரேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
CATEGORIES ஈரோடு