BREAKING NEWS

பவானி தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பவானி தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

ஈரோடு மாவட்டம்,

பவானி அருகில் உள்ள தொட்டிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேர்வராயன் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

தொட்டிபாளையம் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் தூய்மை காவலர்களாக தற்காலிக பணியாளர்களாக 12 ஆண்டுகள் தொடர்ந்து 18 பேர் பணியாற்றி வரும் நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மனு வழங்கினர்.

 

அதேபோல் சேர்வராயன் பாளையம் மாரியம்மன் கோவில் அருகில் பவானி ஆற்றுக்குச் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

 

புது காடையபட்டி பகுதியில் உள்ள சுகாதார வளாகம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பொதுமக்களால் வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து செயலாளர் மாரியப்பன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )