பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அலுவலகம் துவக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

ஈரோடு மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் பகுதி கட்சி அலுவலகம் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைச் செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வண்டியூரான் கோவில் பகுதி கழக அலுவலகத்தை மாநிலத் துணைத் தலைவர் எஸ் எல் பரமசிவம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் எம்பி வெங்கடாசலம் மாவட்ட தலைவர் பிரபு, பொன்னுச்சாமி, முனியப்பன், நடேசன் ராஜேந்திரன், முருகேசன், செந்தில், பழனிசாமி உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS pmkTN politicalToday newsஅரசியல்ஈரோடு மாவட்டம்ஈரோடு வண்டியூரான்கருங்கல்பாளையம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாட்டாளி மக்கள் கட்சிபாட்டாளி மக்கள் கட்சி புதிய அலுவலகம்பாமக