பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்து முதியவர் பலி.

நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்திருந்த மதுரை அருகே உள்ள திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த முதியவர் கிருஷ்ணமுர்த்தி (62) கால்தவறி ஆற்றில் விழுந்தார்.
தகவலறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையிலான வீரர்கள் இரண்டு மணி நேர தேடுதலுக்கு பின்னர் முதியவர் உடல் கிடைத்தது பாபநாசம் திருக்கோவில் பரிகாரம் செய்வதற்கு தெப்பக்குளம் பகுதியே தேர்ந்தெடுத்து..,
அங்கு வைத்து பரிகாரம் செய்து கொடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் முடிவு எடுக்க வேண்டும் இல்லை என்றால் இதே மாதிரி இறப்பு நிறைய நேரிடும் இது சமூக ஆர்வலரின் மட்டுமல்ல பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.