பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம். எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..
தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும் இ- சேவை மையம் அமைக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
இதற்கான ஆவணங்களைச் சட்டமன்ற முன் வரிசை தலைவர்களிடம் அளித்தார்கள் எம்.எல்.ஏ அலுவலகத்தில் அமையும் இந்த மின் சேவை மையம் அரசின் பல்வேறு சான்றிதழ்களை துரிதமாக மக்கள் பெறுவதற்கு பெரிதும் உதவிடும்.
தமிழகத்தில் முன்னோடியாக இதனை நடைமுறைப்படுத்தியுள்ள முதலமைச்சர்க்கு தொகுதி மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ சேவை மையம் தொடங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
CATEGORIES அரசியல்