பாலமேடு ஆதிஜோதி முருகன் கோவில் கார்த்திகை மாத பால்குட விழா.

மதுரை மாவட்டம் பாலமேடு செம்பட்டி தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் ஆதிஜோதி முருகன் திருக்கோவில் கார்த்திகை மாத சோமவார பால்குட விழா நடைபெற்றது.
பாலமேடு பேருந்து நிலையம் முன்பாக உள்ள மாலை விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தும், பால்குடம் எடுத்து வந்தும் பவனி வந்து முருகனுக்கு அபிஷேகங்கள் செய்தனர்.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாலமேடு செம்பட்டிமதுரை மாவட்டம்ஸ்ரீ வரம் தரும் ஆதிஜோதி முருகன் திருக்கோவில்