பூதலூர் தாலுகா இந்தலூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம், பூதலூர் தாலுகா இந்தலூர் நடுத்தெருவை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அளித்துள்ள மனுவில்
தங்கள் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்காக குடோன் வசதியுடன் இடம் ஒருவர் கொடுக்க சம்மதித்தார்.
இதனை நம்பி நாங்கள் வயல் அறுவடை செய்து நெல் வைத்துள்ளோம். இந்த நிலையில் கொள்முதல் நிலையம் அமைக்க அனுமதி கொடுத்ததை எதிர்த்து ஒருவர் அதனை தடுத்து வருகிறார்.
மேலும் அவர் ஜாதி பிரச்சனையை தூண்டிவிட்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக எங்கள் கிராமத்தில் கொள்முதல் நிலையம் இதுவரை அமைக்கப்படவில்லை.
இதனால் நாங்கள் அவதி அடைந்து வருகிறோம். எனவே எங்கள் கிராமத்தில் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் நிலையம் அமைத்து திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.