பூலாம்பாடி பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா.!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள பூலாம்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பரமசிவம் தலைமை தாங்கினார், முதுகலை பட்டதாரி ஆசிரியர் அன்பழகன் வரவேற்புரையாற்றினார், ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் நகர் சி.சக்தி விநாயகம் கலந்துகொண்டு அரசு பள்ளியின் மகத்துவம் குறித்து நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோருக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் பிடிஎ தலைவர் அண்ணாதுரை, எஸ்எம்சி தலைவர் அலமேலு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமாரசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆதிலட்சுமி ரெங்கசாமி, பரிமளா ராஜேந்திரன், வேல்முருகன் பிரபு மற்றும் பள்ளியில் ஆசிரியர்கள், கிராம முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.