பெட்டைகுளம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடைகள். திசையன்விளை தொழிலதிபர் வழங்கினார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளத்தில் செ.ம.காதர் மீரா சாகிபு மேல்நிலை பள்ளி உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி விகிதம் காட்டி இப்பள்ளி திசையன்விளை வட்டாரத்தில் சிறந்த பள்ளியாக திகழ்கிறது.
இப்பள்ளியில் பயிலும் 60 க்கு மேற்பட்ட மாணவமாணவிகளுக்கு திசையன்விளை ஏ.எம்.நிறுவனங்களின் அதிபர் ஏ..அகமது முகைதீன் சீருடைகள் வழங்கி மாணவர்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ஆரோக்கியசாமி,உடற்கல்வி ஆசிரியர் ஸ்டீபன் சைமன் ராஜ்,அலுவலக பணியாளர் செந்தில் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.