BREAKING NEWS

பொத்தேரியில் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – நடுவழியில் பயணிகள் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு.

பொத்தேரியில் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – நடுவழியில் பயணிகள் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு.

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு.,

சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் வரை செல்லும் அரசு பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

 

 

அப்போது செங்கல்பட்டு பொத்தேரி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

 

இதில் காரில் வந்த கணவன், மனைவி மற்றும் குழந்தை சிறு காயமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இதேபோல் அரசு பேருந்தில் வந்த பயணிகளும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். தொடர்ந்து தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தினர்.

 

இதனால் அரசு பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். மேலும் அடுத்தடுத்து வந்த பேருந்துகள் அனைத்தும் கூட்டமாக வந்ததால் மாற்றுப்பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )