BREAKING NEWS

போடிநாயக்கனூரில் சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு, சுமார் 10 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு மாடு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது.

போடிநாயக்கனூரில் சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு, சுமார் 10 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு மாடு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது.

 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மூணார் செல்லும் சாலையில் தனியார் தோட்டத்தில் நேற்று 23.09.2022 காலை
சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் இன்று காலை தோட்டத்தில் உள்ள பசுமாடு தவறி விழுந்துள்ளது.

 

தோட்ட உரிமையாளர் மாட்டை காணவில்லை என்று தேடிய பொழுது கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்ததைக் கண்டு உடனடியாக போடி தீயணைப்பு பேரிடர் மீட்பு துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தினர்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி பசுமாட்டைமீட்க முயற்சி செய்த பொழுது கிணற்றின் பக்கவாட்டு சுவரில் இருந்து சுமார் 6அடி நீளம் உள்ள கொடிய விஷம் உள்ள கரு நாகப் பாம்பு சீறிப்பாய்ந்தது.

 

 

பதட்டமடைந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இருந்த கருநாகப் பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

 

பின்னர் பசு மாட்டை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர் மாலை 4 மணி அளவில் . கிணற்று மேட்டிற்கு கொண்டுவரப்பட்ட மாட்டை கயிறு கட்டி இழுக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

 

 

இதனால் எஸ்கார்ட்ஸ் இயந்திரம் கொண்டுவரப்பட்டு
சுமார் 10 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு மாடு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )