மக்களின் கோரிக்கை ஏற்று புதிய மின்மாற்றியை (73KV)துவக்கி வைத்தார் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.

செய்தியாளர் வி.ராஜா
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம், கழுகேர்கடை ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றியை (73KV) முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக துணைச் செயலாளர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் திரு.சேங்கைமாறன் அவர்களும், மின்சாரத்துறை அதிகாரிகளும், ஒன்றிய கழகச் செயலாளர் திரு.கடம்பசாமி அவர்களும்,
நகரக் கழக செயலாளர் திரு நாகூர் கனி அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) அவர்களும், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், கழக முன்னோடிகளும் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
CATEGORIES சிவகங்கை
TAGS Dmkஅரசியல்கழுகேர்கடை ஊராட்சிசட்டமன்ற உறுப்பினர் திரு.கா.மாரிமுத்துசிவகங்கை மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்புவனம் ஒன்றியம்புதிய மின்மாற்றி