BREAKING NEWS

மதச்சார்பற்ற நாடு என்பதை மதச்சார்புல்ல நாடு என மாற்றி அதை பாதுகாக்க நான்கு ஆண்டுகள் ஆயுதப்பயிற்சி கொடுத்து.

மதச்சார்பற்ற நாடு என்பதை மதச்சார்புல்ல நாடு என மாற்றி அதை பாதுகாக்க நான்கு ஆண்டுகள் ஆயுதப்பயிற்சி கொடுத்து, ஆர்.எஸ்.எஸ். பாஜக வில் இணைத்துக்கொள்ளும் முயற்சியாக அக்னி பாத் திட்டம் செயல்படப்போவதாக சந்தேகம் உள்ளதாக நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பகீர் குற்றச்சாட்டு. அவிநாசியில் செய்தியாளர் சந்திப்பில் பேட்டி.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழைய பேருந்துநிலையத்தில் இருந்த பழைய கட்டிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடித்து தரைமட்டமாக்கப்பட்டு, அங்கு வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.  இருந்தபோதிலும் ஆண்டுக்கணக்காக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தது.  இந்த வணிக வளாகத்தை விரைந்து அமைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அவிநாசி நகர வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

இதையடுத்து நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.   இந்நிலையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் இத்திட்டத்திற்கு ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் மூலம் நடைபெற் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி கட்டுமானப்பணியை துவக்கிவைத்தார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், அதிகாரிகள், பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
இதையடுத்து அவிநாசி இஸ்மாயில் வீதியில் அவிநாசி பகுதிக்கான நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் திமுக அலுவலகத்தை ரிப்பன் வெட்டி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார். இதையடுத்து ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது.

 

அக்கினி பாத்திட்டத்தின் ஒரு முகம் தான் மக்களுக்கு தெரிந்துள்ளது. இன்னும் இதன் கோர முகம் வேறு மாதிரியானது. அதை விளக்க வேண்டிய கடமை எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு உள்ளது. இன்னும் ஒரு 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டு காலத்தில் இந்த நாட்டை மதசார்பற்ற நாடு என்பதை மாற்றி மதசார்புல்ல நாடு, இந்த நாட்டிற்கு ஒரே மதம் தான் உள்ளது என்று உருவாக்கி அந்த மதத்தை காக்க ஆயுதப் பயிற்சியை நான்கு ஆண்டுகள் படிப்படியாக முடித்தபின் ஆர்.எஸ்.எஸ். அல்லது பா.ஜ.க வில் சேர்த்து இதை ஒரு இந்து நாடாக ஆக்க முயற்சி நடப்பதாக அனைத்து தரப்பினருக்கும் சந்தேகம் உள்ளது. அது விரைவில் வெளிவரும்.

 

 

அதை வெளிப்படுத்தும் ஆற்றல் முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் உறுதியான நிலைப்பாடு எடுப்போம்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை என்ன, அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட வளரும் நாடுகளின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்பதை வலைதளங்களில் தேடிப் பாருங்கள், இந்தியாவின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து நிர்மலா சீதாராமன் மற்றும் மோடி பேசும் பொய் அம்பலமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )